உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை

அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.பூஜையையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்த அம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மாலை 6:00 மணிக்கு சீதளாபரமேஸ்வரி அலங்காரத்தில் அங்காளம்மன் முதல் சுற்று பிரகாரத்தில் எழுந்தருளினார்.அம்மன் முன்னிலையில், ஏராளமான பெண்கள் குத்து விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது.ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், சேட்டு என்கிற ஏழுமலை தலைமையிலான பூசாரிகள், அறங்காவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை