உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் ஓசோன் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உலக ஓசோன் தின விழா நடந்தது. திருப்பாச்சனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு, சுற்றுச்சூழல் மற்றும் ஓசோன் பாதுகாப்பு இயக்க தலைவர் ராமன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி வரவேற்றார். இடைநிலை ஆசிரியர் நாகராஜன், பொருளாளர் ராசையன், கதிர்வேல், செயலாளர் ஜெயச்சந்திரன் வாழ்த்தி பேசினர். இதில், உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் ராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி