ரயில்வே போலீசார் பொங்கல் வழிபாடு
விழுப்புரம்: விழுப்புரம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழுப்புரம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் பானையில் பொங்கல் வைத்து, வழிபட்டனர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் நிதிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்து செல்வம், அசோகன் ஆகி யோர் போலீசாருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.