உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ. 2.50 லட்சம் புயல் நிவாரண பொருட்கள்

ரூ. 2.50 லட்சம் புயல் நிவாரண பொருட்கள்

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் ஒன்றியம் சார்பில் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புயல் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.பெஞ்சல் புயன் கனமழை காரணாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேல்மலையனுார் ஒன்றியம் சார்பில் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போர்வைகள், லுங்கிகள், துண்டுகள், அரிசி மூட்டைகள், பிரட், வாட்டர் பாட்டல்கள் உள்ளிட்டவைகளை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கி, நிவாரணப் பொருட்கள் உள்ள வேனை வழியனுப்பி வைத்தார்.பி.டி.ஓ., சையத் முகமத், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை