உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நண்பர் இறந்த சோகம் வாலிபர் தற்கொலை

நண்பர் இறந்த சோகம் வாலிபர் தற்கொலை

வானுார்: நண்பர் இறந்த சோகத்தில் தனியார் நிறுவன ஊழியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வானுார் அடுத்த பட்டானுார் வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 26; தாய், தந்தையை இழந்த அவர், தனது பாட்டி உண்ணாமலையின் பராமரிப்பில் இருந்து வந்ததோடு, புதுச்சேரி தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வந்தார். அவரது நண்பர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், விரக்தியில் இருந்து வந்த விக்னேஸ்வரன், நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ