மேலும் செய்திகள்
மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்
09-Jun-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், நேற்று பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வேனில் மணல் கடத்திக் கொண்டிருந்த 3 பேரை பிடிக்க முயன்றனர். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 54; என்பவர் மட்டும் சிக்கினார். அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.தப்பியோடிய பனப்பாக்கம் சரவணன், பி.குச்சிப்பாளையம் பிரகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
09-Jun-2025