வீர ஆஞ்சநேயருக்கு செந்துார அலங்காரம்
செஞ்சி: செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு திருஞ்சனமும், தொடர்ந்து செந்துாரத்தால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். காலை 10 மணிக்கு மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாத வினியோகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.