உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற கடை உரிமையாளர் கைது

குட்கா விற்ற கடை உரிமையாளர் கைது

விழுப்புரம்: குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், செங்காடு பகுதியை சேர்ந்த சகாயசெல்வம், 34; பெட்டிக்கடையில் சோதனை செய்தார். அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. சகாயசெல்வத்தை கைது செய்து விசாரித்தபோது, புதுச்சேரி கொத்தபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 50; என்பவர், குட்கா பொருட்கள் சப்ளை செய்தது தெரிந்தது. போலீசார் கொத்தபுரிநத்தம் சென்று, சிவக்குமாரின் கார் மற்றும் அதிலிருந்த 110 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். சிவக்குமார் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை