உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெருமாள் கோவிலில் நாளை சிரவண தீபம்

பெருமாள் கோவிலில் நாளை சிரவண தீபம்

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுார் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் நாளை சிரவண தீபம் ஏற்றப்படுகிறது.திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, நாளை 15ம் தேதி மதியம் 2:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் கோவில் உள் புறப்பாடு நடக்கிறது.மாலை 5:30 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கருட கம்பம் எதிரில் எழுந்தருள்கிறார். அதன் பிறகு சிரவண தீபம் ஏற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !