மேலும் செய்திகள்
மாநில அளவிலான மென்பந்து போட்டி
30-Sep-2024
விக்கிரவாண்டி: முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றனர்.மதுரையில் நடந்த மாநில அளவிலான ஐவர் பூப்பந்து போட்டியில் முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்று மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கம் மற்றும் கோப்பையை வென்றனர்.மாணவிகளுக்கு மதுரை பேராயர் மேரி ஜெயசிங், உடற்கல்வி ஆய்வாளர் வினோத் ஆகியோர்பரிசுகளை வழங்கினர்.நேற்று பள்ளியில் மாணவிகளை பள்ளி தாளாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ்பாபு, உடற்கல்வி ஆசிரியர் செல்வ குமார்மற்றும்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
30-Sep-2024