தற்கொலை
கோட்டக்குப்பம்: மனநலம் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி பெரிய காலப்பட்டு அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுகுமார். விவசாயி. இவரது மனைவி செல்லியம்மாள், 56; கடந்த சில மாதங்களாக இவர், மனநலம் பாதிக்கப்பட்டு மருததுவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை கீழ் புத்துப்பட்டு அடுத்த மாத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் செல்லியம்மாள், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டக்குப்பம் போலீசார் இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.