உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் முருகன் கோவிலில் தைப்பொங்கல் வழிபாடு

மயிலம் முருகன் கோவிலில் தைப்பொங்கல் வழிபாடு

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் தைப்பொங்கல் வழிபாடு நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் கோவிலில் நேற்று தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு அதிகாலை 6;00 மூலவருக்கு அர்ச்சனை நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சுவாமிக்கு வழிபாடு, மகா தீபாராதனை, மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்தனர். இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி