உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கணினி வழித்தேர்வு நாளை துவங்குகிறது

 அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கணினி வழித்தேர்வு நாளை துவங்குகிறது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 15ம் தேதி அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கணினி வழித்தேர்வு துவங்குகிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் உள்ள 4 தேர்வு மையங்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நாளை 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை காலை, மதியம் வேளைகளிலும், 19ம் தேதி காலை மட்டும் கணினி வழித்தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் காலை 8:30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு அனுமதி சீட்டோடு வர வேண்டும். 9:00 மணிக்கு மேல் தேர்வு கூடத்திற்கு வரும் தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார். தேர்வர்கள் பகல் 12:30 மணிக்கு முன் தேர்வறையில் இருந்து வெளியேற அனுமதியில்லை. தேர்வர்கள் தங்களின் புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை அசல் அல்லது நகலை கொண்டு வர வேண்டும். தேர்வுக்கூடம் உள்ளே மொபைல், மின்னணு கடிகாரம், புளூடூத் ஆகிய மின்னணு சாதனைங்களை கொண்டு செல்ல அனுமதியில்லை. தேர்வர்கள் எளிய அனலாக் கை கடிகாரங்களை பயன்படுத்தலாம். தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்லும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ் வசதிகள் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து மையங்களுக்கும் தேர்வு நாளில் காலை 6:00 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி