மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது
விழுப்புரம்: திண்டிவனத்தில், மது பாட்டில் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியைச் சேர்ந்தவர் கிருபாநிதி, 49; இவர், தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். தகவலறிந்த திண்டிவனம் போலீசார் நேரில் சென்று 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து கிருபாநிதியை கைது செய்தனர்.