உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில் வந்தே மாதரம் பாடல் நிகழ்ச்சி

ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில் வந்தே மாதரம் பாடல் நிகழ்ச்சி

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஒமந்துார் ஸ்ரீராம் பள்ளியில், வந்தே மாதரம் 150 ஆண்டு நிறைவு விழா நடந்தது. ஓமந்துார் ஸ்ரீராம் ஈஸ்வரி ஐ.ஐ.டி., நீட் பள்ளியில் வந்தே மாதேரம் இசைக்கப்பட்டு 150 ஆண்டு நிறைவு விழா நாள் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 150 மாணவ, மாணவியர் வந்தே மாதரம் பாடலை பாடினர். விழாவில் பங்கேற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் முரளி ரகுராமன் வாழ்த்தி பேசினார். பள்ளி முதல்வர் நான்சி மாதுளா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !