பல்வேறு கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்
திண்டிவனம்: மயிலம் தொகுதியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 100 பேர், முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். மயிலம் சட்சபை தொகுதி ரெட்டணை, அகூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 100 பேர், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் விஜயன், அ.தி.மு.க., தொழிற்சங்க தலைவர் பாஸ்கர், ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் சீனுவாசன், மயிலம் சட்டசபை தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வீரசம்பத் பங்கேற்றனர்.