உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடூர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பு உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்

வீடூர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பு உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்

விக்கிரவாண்டி: வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று காலை 9:00 மணியளவில் வீடூர் அணைக்கு வினாடிக்கு 11,655 கன அடி தண்ணீர் நீர் வரத்து இருந்தது.இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கு வரும் உபரி நீரான 11,655 கன அடி உபரி நீரை திறந்து சங்கராபரணி ஆற்றில் வெளியேற்றினர். மாலை 6:00 மணி நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளவான 605 மில்லியன் கனஅடியில் (32அடி) 542.362 மில்லியன் கனஅடி (31.200 அடி) தண்ணீர் இருப்பு உள்ளது. இரவு 7:00 மணிக்கு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து அணையிலிருந்து இரவு 8:00 மணிக்கு அபாய சங்கு ஒலி எழுப்பியும், கரையோர கிராமங்களில் தண்டோரா போட்டும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இரவு தண்ணீர் கூடுதலாகும் போது அணையிலிருந்து கூடுதலாக உபரி நீர் வெளியேற்றப்படும் என நீர்வளத் துறை செயற்பொறியாளர் ேஷாபனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை