உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

திருவெண்ணெய்நல்லுார்: கணவரைக் காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பல்லரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; இவரது மனைவி தாட்சாயினி. இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கம். கடந்த 23ம் தேதி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த ராஜேந்திரன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.இது குறித்து தாட்சாயினி அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி