உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மீது கார் மோதல் பெண் பலி

பைக் மீது கார் மோதல் பெண் பலி

விழுப்புரம்,: பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் இறந்தார். செஞ்சி அருகே ஈச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி பச்சையம்மாள்,48; இவர், நேற்று முன்தினம் தனது மகன் இருசன், 22; என்பவரோடு, பைக்கில் அமர்ந்து சென்றார். சேத்பட்டு தேசிய நெடுஞ்சாலை, மேல்களவாய் என்ற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ