உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாடியிலிருந்து குதித்த தொழிலாளி பலி 

மாடியிலிருந்து குதித்த தொழிலாளி பலி 

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாடியிலிருந்து குதித்த தொழிலாளி இறந்தார்.விழுப்புரம் சந்தானகோபாலபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் நரேஷ்குமார்,40; கூலி தொழிலாளி. இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் காலை, இவர் தனது வீட்டின் அருகே உள்ள மாடி வீட்டில் 4வது மாடியில் ஏறியவர், திடீரென அங்கிருந்து குதித்துவிட்டார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ