உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

விழுப்புரம்: வளவனுார் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். சகாதேவன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு மகன் கார்த்திகேயன்,41; கூலி தொழிலாளி. இவருக்கு சக்கரை வியாதி அதிகமானதால், நேற்று மனவிரக்தியில் அவரது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ரேணுகா பரமேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை