உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது

விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஓட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ரயில்வே ஜங்ஷன் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, வி.மருதுாரை சேர்ந்த சீனுவாசன் மகன் கோடீஸ்வரன், 19; என்பவர் தனது பைக்கில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வந்தது தெரியவந்தது. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து கோடீஸ்வரனை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி