உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் மோதி வாலிபர் பலி

பஸ் மோதி வாலிபர் பலி

மரக்காணம்: மரக்காணத்தில் அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 22; இவர், சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பைக்கில் புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தார். மரக்காணம் அடுத்த கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகே, எதிரே வந்த அரசு பஸ் ஜெகதீஷ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று இறந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !