உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உணவு பாதுகாப்பு அலுவலருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

உணவு பாதுகாப்பு அலுவலருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் பெட்டிக்கடைகாரரிடம் இருந்து ரூ.1500 லஞ்சம் வாங்கி கைதான உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகருக்கு, 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதையடுத்து, அவர் விருதுநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.ஸ்ரீவில்லிபுத்துார் கோவிந்தன் நகர் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் குருசாமி, இவரிடம் உணவு பாதுகாப்பு சான்று பெற்று தருவதாக கூறி ரூ.1500 லஞ்சம் பெற்றதாக நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரை, விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.பல மணி நேர விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரித்தா உத்தரவிட்டார்.இதனையடுத்து விருதுநகர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்