வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர் மீது வழக்கு
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாட்சிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ராஜகுரு, 28. இவர் செப். 5ல் தன் பிறந்த நாளை நண்பர்கள் முன்னிலையில் வாளால் கேக் வெட்டி கொண்டாடினார். இதையடுத்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் ராஜகுரு மீது வழக்குப்பதிவு செய்தனர்.சில ஊடகங்களில் அவர் பா.ஜ., பிரமுகர் என செய்தி வெளியான நிலையில் அவர், பா.ஜ., உறுப்பினராகக் கூட இல்லை என அக்கட்சியினர் தெரிவித்தனர்.