உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மஞ்சப்பை விழிப்புணர்வு

மஞ்சப்பை விழிப்புணர்வு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில், தமிழக அரசின் நெகிழி இல்லா சமூகத்தை உருவாக்கும் விதமாக மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தும் விதமாக, மனித உரு காட்சி நடந்தது. முதல்வர் உமாராணி துவக்கி வைத்தார். கல்லூரியில் உள்ள அனைத்து பிரிவு மாணவர்களும் கையில் மஞ்சப்பை ஏந்தி மனித உரு காட்சியில் நின்றனர். ஏற்பாடுகளை என் எஸ்.எஸ்., என்.சி.சி., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர். பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ