தேசிய அறிவியல் தினம்
விருதுநகர் : விருதுநகர் கே.வி.எஸ் ஆங்கில பள்ளியில் தேசிய அறிவியல் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்து பேசினார். பெர்னொல்லியின் துப்பாக்கி, மிதக்கும் பந்து, கிரேக்க உபசாரத் தட்டு, தர்பூசணி வெடிப்பு, துளி நைட்ரஜன் தெளிப்பு, பியூட்டேன், அசிட்டோன் வாயு ராக்கெட், காற்று பெரிய துப்பாக்கி, யானை பேஸ்ட் பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பரிசோதனைகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, அனைத்து வட்டார பள்ளி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.