கண்டன ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம், : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ராஜபாளையம் வட்டக்கிளை சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. களஞ்சியம் செயலி மூலம் பதிவேற்றம் செய்ய கருவூல ஆணையரின் உத்தரவை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ஜெகஜோதி ராமலிங்கம் தலைமை வகித்தார்.கிளைச் செயலாளர் முத்துக்குமார், நகராட்சி ஊழியர் சங்கம் வேல்ச்சாமி, மாவட்ட துணை தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி நன்றி கூறினார்.