மார்ச் 18ல் வருவாய்கோட்ட குறைதீர் கூட்டம்
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்துார் ஆகிய வருவாய் கோட்டங்களில் மார்ச் 18 காலை 11:00 மணிக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். இதில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை ஆர்.டி.ஓ.,க்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.