உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருச்சுழி எஸ்.ஐ., மாரடைப்பால் மரணம்

திருச்சுழி எஸ்.ஐ., மாரடைப்பால் மரணம்

திருச்சுழி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் எஸ்.பி.,யின் தனி பிரிவு எஸ்.ஐ.,யாக இருந்த மணிவண்ணன் 52, மாரடைப்பால் மரணம் அடைந்தார்.அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்த இவர் திருச்சுழியில் அலுவலக கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு படுத்தவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவருடைய மனைவி ராஜலட்சுமி உலக்குடி அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 1 மகன் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை