கார் மோதியதில் டூவீலரில் சென்றவர் பலி
விருதுநகர்: விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்தவர்கள் ராமர் 26, கருப்பசாமி 25. இவர்கள் டூவீலரில் (ஹெல்மட் அணியவில்லை).நேற்றுமுன்தினம் இரவு 10:45 மணிக்கு நான்குவழிச்சாலையில் பட்டம்புதுார் விலக்கில் சென்றனர். அப்போது மதுரை நோக்கி காரை ஓட்டிச் சென்ற சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வ டேனியல் விஜய் 24, டூவீலரில் மோதியதில் ராமர் சம்பவயிடத்திலேயே பலியானார். காயமடைந்த கருப்பசாமி விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வச்சக்காரப்பட்டி போலீசார் செல்வ டேனியல் விஜய் கைது செய்தனர்.