தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு மாநிலங்களில் செயல்படும் கட்டுமான தொழிலாளர் நலவாரிய நிதியை மத்திய அரசு பறித்து இஸ்ரம் திட்டத்திற்கு பயன்படுத்துவதை தடுக்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கவுரவ தலைவர் முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வீரப்பன், தர்மராஜ், ராசு, காளிராஜன், சுப்புலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.