உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 8 புதிய ஓட்டுச்சாவடிகள் பகுப்பாய்வு கூட்டத்தில் முடிவு

8 புதிய ஓட்டுச்சாவடிகள் பகுப்பாய்வு கூட்டத்தில் முடிவு

விருதுநகர் : மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுச்சாவடிகள் பகுப்பாய்வு, மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கூட்டம் நடந்தது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள், வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஓட்டுச்சாவடி இடமாற்றம், கட்டடம் மாற்றம், பெயர் மாற்றம், புதிய ஓட்டுச்சாவடி உருவாக்கம் குறித்து அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு விளக்கமாக எடுத்து கூறப்பட்டது.8 புதிய ஓட்டுச்சாவடிகள் புதியதாக ஏற்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் 1893-ல் இருந்து 1901 ஆக ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை உயரும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி