உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்வியாண்டு துவக்க விழா

கல்வியாண்டு துவக்க விழா

சாத்துார் : சாத்துார் மேட்டமலை டி.எஸ்.என்.எல்.பி.எட்., கல்லுாரியில் 19வது கல்வியாண்டு துவக்க விழா நடந்தது. கல்லுாரி தலைவர் கி.ராஜீ தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாப்பா ராஜீ முன்னிலை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் வாழ்த்தினார். நிர்வாக அலுவலர் மாரிக் காளை வரவேற்றார். சிவகாசி ஆர்.டி.ஓ., சாய் பாலாஜி கூறிய தாவது: ஆசிரியர் பணி வணக்கத்திற்குரிய பணி மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து மாணவர் களின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். நேர்மறை எண்ணத்துடன் செயல்பட வேண்டும் எனக் கூறினார். பேராசிரியர் சக்திகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி