லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக். 26 முதல் நவ. 1 வரை கடைபிடிக்கப்படுகிறது. கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.