குண்டர்சட்டத்தில் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் இசக்கி ராஜா 40, இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் மணிகண்டன் என்பவரை கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்றங்களில் ஈடு படுவதை தடுக்க எஸ்.பி., கண்ணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சுகபுத்ரா இவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.