மேலும் செய்திகள்
பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா
07-May-2025
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.இக்கோயில் திருவிழா ஏப். 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் அம்மன் காமதேனு, கைலாச பர்வத, வேதாள, யானை, ரிஷப உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். ஐந்து நாட்களுக்கு முன்பு பொங்கல் திருவிழா நடந்தது. 3 நாட்களுக்கு முன்பு கயர் குத்து திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் அழகு குத்தியும் அக்னி சட்டி எடுத்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
07-May-2025