உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் தொடரும் மழை அக்.21 வரை பக்தர்களுக்கு தடை

சதுரகிரியில் தொடரும் மழை அக்.21 வரை பக்தர்களுக்கு தடை

ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழையினால் அக். 21 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இக்கோயிலில் நாளை (அக். 18ல்) ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு, அக். 20 தீபாவளி, அமாவாசை வழிபாடு நடக்கிறது. கடந்த சில நாட்களாக சதுரகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் ஓடைகளில் நீர்வரத்து உள்ளது. இதனால் இன்று (அக். 17)முதல் அக். 21 வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இங்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும், என கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை