மேலும் செய்திகள்
மரக்கடையில் தீ விபத்து
21-Nov-2024
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் வயதான தம்பதியான பரமசிவம் 75, இவரது மனைவி கோமதி 71, தற்கொலைக்கு முயன்றனர். இதில் கணவர் இறந்தார்.அருப்புக்கோட்டை நேதாஜி தெருவை சேர்ந்தவர் பரமசிவம், , டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கோமதி, உடல் நல குறைவாக இருந்தார். இவர்களது ஒரே மகள் சென்னையில் வசிக்கிறார். உடல் நிலை சரியாகாததால் தம்பதி வீட்டிலிருந்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில் பரமசிவம் இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Nov-2024