இணைய வழி மோசடி விழிப்புணர்வு கருத்தரங்கம்
ராஜபாளையம்; ராஜபாளையத்தில் கிரெடிட் ஆக்சிஸ் கிராமின், கிரெடிட் ஆக்சிஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் நிதி அறிவும் சமூக சுதந்திரம் குறித்த கிராம பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில் இணைய வழி திருட்டு மோசடி குறித்தும், அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் வாங்கி மற்றும் சொத்து ஆவணங்கள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து கிராமப்புற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மதுரை மண்டல மேலாளர் சீனிவாச ஆஞ்சநேய ரெட்டி தலைமை வகித்தார். கோட்ட மேலாளர் ஜான் பீட்டர் முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் உதய கிருஷ்ணமூர்த்தி பேசினார். கந்தகுமார் நன்றி கூறினார்.