உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் தொட்டி, மகளிர் சுய உதவி குழு கட்டடம் சேதம்

குடிநீர் தொட்டி, மகளிர் சுய உதவி குழு கட்டடம் சேதம்

சிவகாசி: மேல்நிலை குடிநீர் தொட்டி, மகளிர் சுய உதவிக் குழு கட்டடம் சேதம் என சிவகாசி அருகே ஆனைக்குட்டம் ஊராட்சி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.சிவகாசி அருகே ஆனைக்குட்டம் ஊராட்சியில் ஏ.மீனாட்சிபுரம், இந்திரா நகர், லட்சுமி நகர், அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அகதிகள் முகாமில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. ஊராட்சி அலுவலகம் அருகே மகளிர் சுய உதவி குழு கட்டடம் சேதம் அடைந்துள்ளது. இதன் அருகிலேயே நுாலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம் இயங்குகின்றது.எனவே எப்பொழுதும் இந்த கட்டடத்தின் அருகில் மக்கள் நடமாட்டம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கும் முன்னர் சுய உதவி குழு கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும். ஆனைக்குட்டம் கண்மாய் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளது. மேலும் கண்மாயில் உள்ள மடையும் சேதம் அடைந்துள்ளது. எனவே கண்மாயினை துார்வாரி மடையினை சீரமைக்க வேண்டும்.பஸ் ஸ்டாப்பில் இருந்து ஊருக்குள் செல்லும் ரோட்டில் இருபுறமும் ஓடை உள்ளது. ரோட்டில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகனங்கள் அச்சத்துடனே சென்று வர வேண்டி உள்ளது. ஏ.மீனாட்சிபுரத்தில் உள்ள பிளாட்களில் இரவில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கின்றது. இதனால் பெண்கள் நடமாட முடியவில்லை. எனவே போலீசார் கண்காணிப்பு வேண்டும்.சுப்புராஜ்: இந்திரா நகரில் தெருவில் ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் நடந்து செல்வதற்கே சிரமம் ஏற்படுகின்றது. மேலும் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றோம். எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஓடையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். ராமலட்சுமி, ஊராட்சி துணைத் தலைவர்: இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பின்றி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடம் மிகவும் சிறியதாக உள்ளது. இதன் ஒரு பகுதியிலேயே கிராம நிர்வாக அலுவலகமும் செயல்படுகின்றது. எனது ஊராட்சி அலுவலகத்திற்கு என புதிய கட்டடம் கட்ட வேண்டும்.முத்துராஜ், ஊராட்சி தலைவர்: ஊராட்சியில் பெரும்பான்மையான தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. சிமெண்ட் ரோடு போடப்பட்டுள்ளது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இரு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் சமுதாய கிணறும் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ