உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குகன்பாறையில் விவசாய நிலங்களில் சேதமான, சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்

குகன்பாறையில் விவசாய நிலங்களில் சேதமான, சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்

சிவகாசி:வெம்பக்கோட்டை ஒன்றியம் குகன்பாறை பகுதியில் விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் , சேதம் அடைந்த மின் கம்பங்களால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.குகன்பாறை பகுதியில் சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. இந்த விவசாய நிலங்களில் வழியாக மின்சாரம் வினியோகம் செய்வதற்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மின்சாரம் செல்கின்றது. இந்நிலையில் விவசாய நிலங்களை அமைக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் ஒரு சில மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. பெரிய மழை பெய்யும் போது சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது.இதனால் விவசாயிகள் அச்சத்துடனே விவசாய பணிகளை செய்து வருகின்றனர். விவசாய பணிகள் நடைபெறும் போது மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும், சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ