விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு
சிவகாசி : விருதுநகர் மாவட்டம், விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை, சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட 2,300க்கும் மேற்பட்ட பொருட்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில், சுடுமண்ணால் ஆன மணி, காதணி, சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டன.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், “இங்கு, முன்னோர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன. அதன்படி, சங்கு வளையல் வியாபாரமும் நடந்துள்ளது. மேலும், அலங்கார பொருட்களிலும் முன்னோர்களுக்கு ஆர்வம் இருந்ததற்கு சான்றாக, சுடுமண் மணி, அலங்கரிக்கப்பட்ட காதணி கிடைத்துள்ளது,” என்றார்.