அரசு மருத்துவமனைக்கு நாற்காலிகள் நன்கொடை
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையின் உள்நோயாளிகள் அமர்வதற்காக கலசலிங்கம் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை சார்பில் 1000 பிளாஸ்டிக் நாற்காலிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.இதில் விருதுநகர் அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயசிங், துணை முதல்வர் அனிதா, அறக்கட்டளை தலைவர், கலசலிங்கம் ஆராய்ச்சி, கல்வி அகாடமி வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகி, நிலைய மருத்துவ அலுவலர் கணேசன், மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, துணை கண்காணிப்பாளர் அன்புவேல், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் சுல்தான் முகமது இப்ராஹிம், வெங்கடேஷ் பிரசன்னா உள்பட பலர் பங்கேற்றனர்.