உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நடுவபட்டியில் சேதம் அடைந்த நுாலக கட்டடத்தை இடிக்க எதிர்பார்ப்பு

நடுவபட்டியில் சேதம் அடைந்த நுாலக கட்டடத்தை இடிக்க எதிர்பார்ப்பு

சிவகாசி: -சிவகாசி அருகே நடுவபட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள நுாலக கட்டடத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிவகாசி அருகே நடுவபட்டியில் எம்.பி., தொகுதி நிதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுாலக கட்டடம் கட்டப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே நுாலகம் செயல்பட்டு வந்த நிலையில் சேதம் அடைந்து விட்டது. தற்போது கட்டடம் முழுவதுமே சிமெண்ட் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இப்பகுதி சிறுவர்கள் விபரீதம் அறியாமல் சேதமடைந்த கட்டடத்தின் அருகே விளையாடுகின்றனர். மக்கள் நடமாடும் போது இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்தக் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும். இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் நுாலகம் உள்ள நிலையில், இப்பகுதியில் சமுதாயக்கூடம் இல்லாத நிலையில் விசேஷங்கள் நடத்துவதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த இடத்தில் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை