உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கரிசல் போட்டிகள் கால அவகாசம் நீட்டிப்பு

கரிசல் போட்டிகள் கால அவகாசம் நீட்டிப்பு

விருதுநகர்:கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 2-வது கரிசல் இலக்கியத் திருவிழா 2024 டிச. 14, 15 ஆகிய நாட்களில் நடக்க உள்ளது.இதில் பொதுமக்களுக்காக மரபு கவிதை எழுதுதல் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் தமிழகத்தை சார்ந்த எவரும் பங்கேற்கலாம்.போட்டிக்கான மரபு கவிதைகளை டிச. 7 gmail.comமின்னஞ்சல் முகவரிக்கு Bamini Unicode என்ற எழுத்து வடிவில் அனுப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 94874 21826 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ