பெண் பக்தர் பலி
ஸ்ரீவில்லிபுத்துார் : சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் தாலுகா தென்கரை சுப்ரமணியின் மனைவி மகா 55. இவர் புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று உறவினர்களுடன் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்ய வந்தார். காலை 10:30 மணிக்கு கோயிலுக்கு செல்லும் வழியில் சின்ன பசுக்கடை ஏற்றம் என்ற இடத்தில் மலை ஏறும் போது நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார். அறநிலையத்துறையினர், வனத்துறையினர் உடலை பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.