மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த மாடு மீட்பு
04-Apr-2025
நரிக்குடி: நரிக்குடி பிள்ளையார்நத்ததை சேர்ந்த அய்யனாரின் ஜல்லிக்கட்டு காளைகள் சுப்பிரமணியன் தோட்டத்தில் மேய்ந்தது கொண்டிருந்தன. அப்போது இரண்டும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டன. அதில் ஒரு காளை தடுமாறி, 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. திருச்சுழி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன், சிறப்பு நிலைய அலுவலர் முனீஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தத்தளித்த ஜல்லிக்கட்டு காளையை கயிறு கட்டி, உயிருடன் மீட்டனர்.
04-Apr-2025