லோடு வேனில் தீ விபத்து
சிவகாசி: சிவகாசி ஜக்கம்மாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பரஞ்சோதி. இவரது லோடு வேன் அதே பகுதியில் கழிவு அட்டை பெட்டிகளை ஏற்றிய நிலையில் நின்று இருந்தது. நேற்று அதிகாலை 12:45 மணிக்கு அட்டைப் பெட்டியில் தீப்பிடித்து வேன் எரிந்தது.சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இது குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.