உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே விருதுநகர் ரோட்டில் லோடு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பழநியில் இருந்து தூத்துக்குடிக்கு நுால் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி விருதுநகர் - அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு சென்று கொண்டு இருந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த வேலுச்சாமி, 60, லாரியை ஓட்டி வந்துள்ளார். அதிகாலை 3:00 மணிக்கு தனியார் கல்லூரி அருகே வந்த போது நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியதில் லாரி கவிழ்ந்தது. விபத்தில் டிரைவருக்கு எந்தவித காயமும் இல்லை. போக்குவரத்து வேறு வழியாக திருப்பி விடப்பட்டது. போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ